இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழ் சீரியல் நடிகரான விஷ்ணுகாந்த் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சிப்பிக்குள் முத்து, என்றென்றும் புன்னகை ஆகிய தொடர்களில் நடித்திருக்கிறார். சக நடிகையான சம்யுக்தாவை திருமணம் செய்து கொண்ட அவர் கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களிலேயே பிரிந்துவிட்டார். அதன் பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த விஷ்ணுகாந்த் தெலுங்கில் குண்டேநிண்டா குடிகண்டலு என்கிற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக வித்யா நம்பர் 1 தொடரில் நடித்த தேஜஸ்வினி கவுடா நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தெலுங்கிலும் ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தோசை மாவில் சாரி என எழுதி மன்னிப்பு கேட்கும் விஷ்ணுகாந்த்தின் பதிவு இணையத்தில் வைரலானது. அவர் யாரிடம் மன்னிப்பு கேட்கிறார் என ரசிகர்கள் குழம்ப, அந்த பதிவில் விஷ்ணுகாந்தின் கெட்டப் பாலு கதாபாத்திரம் போல் உள்ளதால், சீரியல் படப்பிடிப்பிற்காக எடுத்த வீடியோவை தான் விஷ்ணுகாந்த் வெளியிட்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.