'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சின்னத்திரையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் யுவராஜ் நேத்ரன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் வெசஸ் கேர்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவரது மனைவி தீபாவும், மூத்தமகள் அபிநயாவும் கூட சீரியல்களில் நடித்து வருகிறார்கள். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரஞ்சிதமே தொடரில் சிறப்பாக நடித்து வந்த நேத்ரன் திடீரென சீரியலை விட்டு விலகினார். இதற்கான காரணம் பலருக்கும் தெரியாதிருந்த நிலையில், நேத்ரனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும், அப்போது கல்லீரலிலும் பாதிப்பு கண்டறியப்பட்டதால் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் தற்போது தெரியவந்துள்ளது.
நேத்ரனின் தற்போதைய உடல்நிலை குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அபிநயா தனது தந்தை சீக்கிரம் குணமாக பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்களும் நேத்ரன் பூரண நலம் பெறுவார் மீண்டும் சீரியல் நடிப்பார் என நேத்ரனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.