ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
தமிழ் சின்னத்திரையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் யுவராஜ் நேத்ரன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் வெசஸ் கேர்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவரது மனைவி தீபாவும், மூத்தமகள் அபிநயாவும் கூட சீரியல்களில் நடித்து வருகிறார்கள். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரஞ்சிதமே தொடரில் சிறப்பாக நடித்து வந்த நேத்ரன் திடீரென சீரியலை விட்டு விலகினார். இதற்கான காரணம் பலருக்கும் தெரியாதிருந்த நிலையில், நேத்ரனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும், அப்போது கல்லீரலிலும் பாதிப்பு கண்டறியப்பட்டதால் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் தற்போது தெரியவந்துள்ளது.
நேத்ரனின் தற்போதைய உடல்நிலை குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அபிநயா தனது தந்தை சீக்கிரம் குணமாக பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்களும் நேத்ரன் பூரண நலம் பெறுவார் மீண்டும் சீரியல் நடிப்பார் என நேத்ரனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.