தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

மலையாள சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ரேகா கிருஷ்ணப்பா தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், ஒரு நடிகையாக அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது தெய்வமகள் நெடுந்தொடர் தான். அதில் ரேகா கிருஷ்ணப்பா ஏற்று நடித்திருந்த அண்ணியார் கதாபாத்திரத்தை வைத்து, ரசிகர்கள் இன்றளவும் இவரை திரையில் பார்த்தால் அண்ணியாரே என்று தான் அழைக்கிறார்கள். அதன்பிறகு ரேகா கிருஷ்ணப்பா தமிழில் சில ஹிட் தொடர்களில் நடித்தாலும் தெய்வமகள் அளவுக்கு பெயர் கிடைக்கவில்லை. இதனால் சீரியலுக்கு குட் பை சொல்லிவிட்டு மீண்டும் சினிமா பக்கம் சென்ற ரேகா, 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டாராம்.
இந்நிலையில், அண்மையில் பேட்டி அளித்த ரேகா கிருஷ்ணப்பா, சீரியலை விட்டு விலகியது ஏன்? என்ற கேள்விக்கு, 'சீரியலில் எனக்கு வரும் கேரக்டர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே மாதிரியாக இருந்தது. அதனால் தான் வேண்டாம் என்று இருந்துவிட்டேன். இப்போது மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.




