2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் வீஜே தீபிகா. தமிழக இளைஞர்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தீபிகா, அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது கூறிய விஷயம் சர்ச்சையாக மாறியுள்ளது.
அதில், 'நான் பீரியட்ஸ் நாட்களில் கூட கோவிலுக்கு செல்வேன். பூஜை அறைக்கு செல்வேன். சாமி கும்பிடுவேன். என்னை பொருத்தவரை அவர் என்னுடைய சாமி, என்னுடைய அய்யனார். எனக்கு உடம்பு சரியில்லை அவ்வளவுதான். அவர் என்னை ஏற்றுக்கொள்வார். என்னை அவர் ஒருபோதும் ஒதுக்கமாட்டார். கடவுளே ஒதுக்காதபோது என்னை ஒதுக்க நீ யார்?. நான் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று சொல்ல உனக்கு உரிமையில்லை' என்று கூறியுள்ளார். இவரது இந்த பேட்டிக்கு சிலர் பாசிட்டிவாக வாழ்த்துகள் கூறினாலும் பலர் கடவுள் விஷயத்தில் இப்படி விளையாடக்கூடாது என அட்வைஸ் செய்து எச்சரித்து வருகின்றனர்.