‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட தொடர் 'எதிர்நீச்சல்'. பெரிய வரவேற்பை பெற்ற 'கோலங்கள்' தொடரை இயக்கி, நடித்த திருச்செல்வம் தான் இந்த தொடரை இயக்கி வந்தார்.
இந்த தொடரில் வில்லனாக ஆதி குணசேகரன் என்கிற கேரக்டரில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நடித்து வந்தார். தன்னுடைய மிரட்டலான நடிப்பாலும் நக்கலான டயலாக் டெலிவெரியாலும் ரசிகர்களை கவர்ந்தார். அதிலும் அவர் பேசும் 'இந்தாம்மா ஏய்' என்கிற வசனம் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரிமுத்து திடீரென மரணம் அடைந்தார். இதனால் இந்த தொடர் பெரும் பின்னடைவை சந்தித்தது. அவருக்கு பதிலாக வேல ராமமூர்த்தி நடித்தார். ஆனால் அவரது நடிப்பு வரவேற்பு பெறவில்லை. கடந்த சில நாட்களுக்கு தொடரின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் இணைந்து குழு போட்டோ எடுத்துக் கொண்டனர். அந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதை வைத்து பார்க்கையில் விரைவில் ‛எதிர்நீச்சல்' சீரியல் முடிவுக்கு வருகிறது.




