22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செப் வெங்கடேஷ் பட் நீண்ட நாட்களாக நடுவராக இருந்து வந்தார். தற்போது அவர் அந்த சேனலிலிருந்து விலகி வேறொரு தனியார் சேனலில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில், அவர் எதற்காக விஜய் டிவியை விட்டு விலகினார் என்கிற கேள்வியை பலரும் கேட்டு வந்தனர்.
அதற்கு பதிலளித்த வெங்கடேஷ் பட், 'நான் விஜய் டிவியில் தொடர்ந்து 24 வருடங்களாக கிச்சன் சூப்பர் ஸ்டார், கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர், குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளேன். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. மீடியா மேஷன்ஸ் நிறுவனத்திற்கும் விஜய் டிவிக்கும் இடையே நடந்த பிரச்னை காரணமாக அவர்கள் சேனலை விட்டு வெளியேறினர். எனக்கு கம்போர்ட் ஷோன் அவர்கள் தான். அதனால் தான் அவர்களுடன் சேர்ந்து நானும் வெளியே வந்தேன். நான் விஜய் டிவியில் இருந்து விலகவில்லை. எனக்கும் விஜய் டிவிக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை' என்று கூறியுள்ளார்.