சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை மலையாள திரையுலகில் மட்டுமே தனது நடிப்பு எல்லையை சுருக்கிக் கொண்டிருந்த நடிகர் பஹத் பாசில், இந்த இரண்டு வருடங்களில் விக்ரம், புஷ்பா, மாமன்னன் என இந்த மூன்று படங்கள் மூலமாக தென்னிந்தியாவில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் கூட பேசப்படும் நடிகராக மாறிவிட்டார். ஆனால் இவை எல்லாவற்றிலும் வில்லன் மற்றும் சீரியஸ் கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார்.
அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் அவரது நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படத்தில் மிகப்பெரிய தாதாவாக நடித்திருந்தாலும் படம் முழுக்க நகைச்சுவையை அள்ளித் தெளிக்கும் விதமாக நடித்திருந்தார் பஹத் பாசில். மேலும் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் இதில் வில்லனாக இல்லாமல் ரஜினியுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
சமீபத்தில் அவர் கூறும்போது, தெலுங்கிலும் இதுபோன்று ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. அந்த வகையில் கடந்த வருடம் ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ் கார்த்திகேயா தயாரிப்பில் தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். அதில் 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்' என்கிற பிக்சன் காமெடி படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.