கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? | ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் பஹத் பாசில் படம் அறிவிப்பு |
பிரபல சினிமா தயாரிப்பாளரான ரவீந்திரன் சந்திரசேகர், சின்னத்திரை நடிகை மஹாலெட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமுதலே சோஷியல் மீடியாவில் தொடர்ந்து டிரெண்டாகி வரும் ரவீந்தர், பண மோசடி வழக்கு, ஐசியுவில் சிகிச்சை என பேசு பொருளானார். இந்நிலையில், அவர் 'என்னுடைய உலகத்தை மிகவும் மோசமாக மிஸ் செய்கிறேன்' என்று இன்ஸ்டாவில் பதிவிட, அதை பார்த்த பலரும் மஹாலெட்சுமியுடன் விவாகரத்தா? என கேட்டு வருகின்றனர். அதற்கு பதிலளித்த ரவீந்தர், 'எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மஹாலெட்சுமி தான். அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்யுங்கள். ஆனால், நீங்கள் நினைப்பது ஒருபோதும் நடக்காது' என பதிலடி கொடுத்துள்ளார்.