பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

செய்தி வாசிப்பாளரான நிர்மலா பெரியசாமி ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியிருந்தார். தற்போது பிசினஸில் பிசியாக இருக்கும் நிர்மலா சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வபோது தலைக்காட்டி வருகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கு கோடை இடி பட்டம் எவ்வாறு வந்தது? என்ற சுவாரசியமான தகவலை கூறியுள்ளார். நிர்மலா பெரியசாமி நான்காம் வகுப்பு படிக்கும் போதே தனது தந்தை மற்றும் நண்பர்களுடன் அரசியல் விவாதங்களில் ஈடுபடுவாராம். இது அவருக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பள்ளியில் ஸ்மார்ட்டான மாணவியாக வலம் வந்த நிர்மலா படிப்பில் மட்டும் டாப் இல்லையாம் விளையாட்டு, மேடை பேச்சு, நாடகம் என அனைத்திலும் ஒரு கை பார்ப்பாரம். அப்படி ஒருமுறை மேடை நாடகத்தில் கர்ணன் வேடமிட்டு நடித்த போது மைக் இல்லாமலேயே வசனங்களில் வெளுத்து வாங்கினாராம். அதை பார்த்து அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் நிர்மலாவுக்கு கோடை இடி என்ற பட்டப்பெயரை கொடுத்துள்ளார். நாளடைவில் அந்த பெயர் பள்ளிகளிலும் பரவ கோடை இடி நிர்மலா என அனைவரும் அழைத்தனராம்.