‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

செய்தி வாசிப்பாளரான நிர்மலா பெரியசாமி ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியிருந்தார். தற்போது பிசினஸில் பிசியாக இருக்கும் நிர்மலா சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வபோது தலைக்காட்டி வருகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கு கோடை இடி பட்டம் எவ்வாறு வந்தது? என்ற சுவாரசியமான தகவலை கூறியுள்ளார். நிர்மலா பெரியசாமி நான்காம் வகுப்பு படிக்கும் போதே தனது தந்தை மற்றும் நண்பர்களுடன் அரசியல் விவாதங்களில் ஈடுபடுவாராம். இது அவருக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பள்ளியில் ஸ்மார்ட்டான மாணவியாக வலம் வந்த நிர்மலா படிப்பில் மட்டும் டாப் இல்லையாம் விளையாட்டு, மேடை பேச்சு, நாடகம் என அனைத்திலும் ஒரு கை பார்ப்பாரம். அப்படி ஒருமுறை மேடை நாடகத்தில் கர்ணன் வேடமிட்டு நடித்த போது மைக் இல்லாமலேயே வசனங்களில் வெளுத்து வாங்கினாராம். அதை பார்த்து அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் நிர்மலாவுக்கு கோடை இடி என்ற பட்டப்பெயரை கொடுத்துள்ளார். நாளடைவில் அந்த பெயர் பள்ளிகளிலும் பரவ கோடை இடி நிர்மலா என அனைவரும் அழைத்தனராம்.