'டைட்டானிக்' ரிலீஸ் : தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைக்கும் கலையரசன் | 2025ன் அரையாண்டில் தமிழ் சினிமா வசூல் எவ்வளவு? | கோலிவுட்டில் அதிரடிக்கு தயாராகும் பீஸ்ட் நடிகை | கூடைப்பந்து வீராங்கனை டூ நடிகை: பன்முகத்திறனுடன் வைஷாலி | ஹாலிவுட் ரேஸ் படங்களில் நடிக்க விரும்பும் அஜித்குமார் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா நாயகன் வில்லனாக மிரட்டிய “நூறாவது நாள்” | நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 |
பிரபல சின்னத்திரை நடிகரான ஸ்ரீகுமார் 'வானத்தைப்போல' தொடரில் நடித்து வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் ஆரம்பகாலக்கட்டத்தில் அலட்சியத்தால் தான் பல சினிமா வாய்ப்புகளை இழந்ததாக கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் ‛பெரியண்ணா படத்தில் முதலில் நடிக்க விஜயகாந்த் என்னை தான் செலக்ட் செய்திருந்தார். ஆனால், அப்போது விஜய், சூர்யாவை சிபாரிசு செய்தார். ஆரம்ப காலக்கட்டத்தில் நானும் சூர்யாவும் ஒரே டான்ஸ் க்ளாஸில் ஆடியிருக்கிறோம். சூர்யாவுக்கு நிறையவே திறமைகள் இருந்தது. எனவே, இறுதியில் அவருக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என் அப்பா என்னிடம் டான்ஸ் கத்துக்கோ, பைட் கத்துக்கோ என்று அடிக்கடி சொல்வார். ஆனால், அப்போதெல்லாம் நான் அசால்ட்டாக இருந்துவிட்டேன். அதனாலேயே பல வாய்ப்புகளை நான் இழந்துவிட்டேன்' என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.