50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு |
பிரபல சின்னத்திரை நடிகரான ஸ்ரீகுமார் 'வானத்தைப்போல' தொடரில் நடித்து வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் ஆரம்பகாலக்கட்டத்தில் அலட்சியத்தால் தான் பல சினிமா வாய்ப்புகளை இழந்ததாக கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் ‛பெரியண்ணா படத்தில் முதலில் நடிக்க விஜயகாந்த் என்னை தான் செலக்ட் செய்திருந்தார். ஆனால், அப்போது விஜய், சூர்யாவை சிபாரிசு செய்தார். ஆரம்ப காலக்கட்டத்தில் நானும் சூர்யாவும் ஒரே டான்ஸ் க்ளாஸில் ஆடியிருக்கிறோம். சூர்யாவுக்கு நிறையவே திறமைகள் இருந்தது. எனவே, இறுதியில் அவருக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என் அப்பா என்னிடம் டான்ஸ் கத்துக்கோ, பைட் கத்துக்கோ என்று அடிக்கடி சொல்வார். ஆனால், அப்போதெல்லாம் நான் அசால்ட்டாக இருந்துவிட்டேன். அதனாலேயே பல வாய்ப்புகளை நான் இழந்துவிட்டேன்' என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.