'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி தொகுப்பாளரான வீஜே பிரியங்கா தேஷ்பாண்டே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மேலும் பெயர் புகழுடன் வலம் வருகிறார். பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா முன்னதாக பல மேடைகளில் தனது கணவர் குறித்து நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். ஆனால், சமீபகாலங்களில் பிரியங்கா தனது கணவர் குறித்து பேசுவதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கூட எந்தவொரு இடத்திலும் தனது கணவர் பற்றி பேசவில்லை. இதனால் இருவரும் பிரிந்துவிட்டார்களா? என்று அப்போதே கேள்விகள் எழுந்தது. ஆனாலும், பிரியங்கா தரப்பிலிருந்து அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை.
இந்நிலையில், ப்ரியங்கா தனது அம்மாவுடன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றை கொடுத்திருந்தார். அப்போது பேசிய பிரியங்காவின் தாயார், 'பிரியங்காவை நினைத்து நான் மிக பெருமைப்படுகிறேன். ஆனால், இப்போது அவள் வாழ்க்கையில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று சத்தியம் செய்ய வேண்டும். சரியான நபரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். இதன் மூலம் பிரியங்கா தனது காதல் கணவர் பிரவீனை பிரிந்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது.