திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி தொகுப்பாளரான வீஜே பிரியங்கா தேஷ்பாண்டே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மேலும் பெயர் புகழுடன் வலம் வருகிறார். பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா முன்னதாக பல மேடைகளில் தனது கணவர் குறித்து நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். ஆனால், சமீபகாலங்களில் பிரியங்கா தனது கணவர் குறித்து பேசுவதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கூட எந்தவொரு இடத்திலும் தனது கணவர் பற்றி பேசவில்லை. இதனால் இருவரும் பிரிந்துவிட்டார்களா? என்று அப்போதே கேள்விகள் எழுந்தது. ஆனாலும், பிரியங்கா தரப்பிலிருந்து அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை.
இந்நிலையில், ப்ரியங்கா தனது அம்மாவுடன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றை கொடுத்திருந்தார். அப்போது பேசிய பிரியங்காவின் தாயார், 'பிரியங்காவை நினைத்து நான் மிக பெருமைப்படுகிறேன். ஆனால், இப்போது அவள் வாழ்க்கையில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று சத்தியம் செய்ய வேண்டும். சரியான நபரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். இதன் மூலம் பிரியங்கா தனது காதல் கணவர் பிரவீனை பிரிந்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது.