ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் காவேரி. ஆனால், வெள்ளித்திரையில் அவருக்கு பெரிதாக சான்ஸ் கிடைக்கவில்லை. அதன்பிறகு மெட்டி ஒலி சீரியல் தான் அவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதன்பின் ஒன்றிரண்டு தொடர்களில் நடித்து வந்த காவேரி திருமணத்திற்கு பின் சின்னத்திரையை விட்டும் விலகிவிட்டார்.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் பிரபல ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள காவேரி தன் வாழ்வில் நடந்த துன்பகரமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். 'விஜய், அஜித் என் சமகால நண்பர்கள். அவர்களோடு நடிக்க ஆசை. ஆனால், இப்போது அவர்களுக்கு அம்மா கேரக்டரில் தான் நடிக்க முடியும். அதனால் தான் அந்த ஆசையை தள்ளி வைத்துவிட்டேன்' என்று கூறியுள்ளார். தைராய்டு பிரச்னைக்காக சிகிச்சை எடுத்து வரும் காவேரி குணமடைந்து விரைவில் சீரியல்களில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.