நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் காவேரி. ஆனால், வெள்ளித்திரையில் அவருக்கு பெரிதாக சான்ஸ் கிடைக்கவில்லை. அதன்பிறகு மெட்டி ஒலி சீரியல் தான் அவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதன்பின் ஒன்றிரண்டு தொடர்களில் நடித்து வந்த காவேரி திருமணத்திற்கு பின் சின்னத்திரையை விட்டும் விலகிவிட்டார்.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் பிரபல ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள காவேரி தன் வாழ்வில் நடந்த துன்பகரமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். 'விஜய், அஜித் என் சமகால நண்பர்கள். அவர்களோடு நடிக்க ஆசை. ஆனால், இப்போது அவர்களுக்கு அம்மா கேரக்டரில் தான் நடிக்க முடியும். அதனால் தான் அந்த ஆசையை தள்ளி வைத்துவிட்டேன்' என்று கூறியுள்ளார். தைராய்டு பிரச்னைக்காக சிகிச்சை எடுத்து வரும் காவேரி குணமடைந்து விரைவில் சீரியல்களில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.