2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா | ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட் | ஹுமா குரோசிக்கு காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா? | எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில் | 25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி' | ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‛ஹிட்டன் கேமரா' | 100 சதவீதம் விஜய்யிசம் ; ‛ஜனநாயகன்' குறித்து படத்தொகுப்பாளர் பகிர்ந்த தகவல் | படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து மம்முட்டியின் ‛டர்போ' புரோமோ பாடல் ரிலீஸ் ; ரசிகர்கள் கிண்டல் | ‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் |
தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் காவேரி. ஆனால், வெள்ளித்திரையில் அவருக்கு பெரிதாக சான்ஸ் கிடைக்கவில்லை. அதன்பிறகு மெட்டி ஒலி சீரியல் தான் அவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதன்பின் ஒன்றிரண்டு தொடர்களில் நடித்து வந்த காவேரி திருமணத்திற்கு பின் சின்னத்திரையை விட்டும் விலகிவிட்டார்.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் பிரபல ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள காவேரி தன் வாழ்வில் நடந்த துன்பகரமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். 'விஜய், அஜித் என் சமகால நண்பர்கள். அவர்களோடு நடிக்க ஆசை. ஆனால், இப்போது அவர்களுக்கு அம்மா கேரக்டரில் தான் நடிக்க முடியும். அதனால் தான் அந்த ஆசையை தள்ளி வைத்துவிட்டேன்' என்று கூறியுள்ளார். தைராய்டு பிரச்னைக்காக சிகிச்சை எடுத்து வரும் காவேரி குணமடைந்து விரைவில் சீரியல்களில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.