'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரபல சின்னத்திரை நடிகையான ரேகா நாயர், ‛ஆண்டாள் அழகர், பகல் நிலவு, நாம் இருவர் நமக்கு இருவர்' ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், சமூக பிரச்னைகள் குறித்து பேசி சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், ‛‛இளம் வயதிலேயே திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு ஐஏஎஸ் படிக்க ஆசைப்பட்டதாகவும் அதற்காக டில்லி சென்றபோது அவரது கணவர் சான்றிதழ்களை கிழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரேகா நாயர் 3 முறை தற்கொலை முயற்சி செய்ததாகவும், தற்போது தன்னை நிரூபிக்கவே தொடர்ந்து நிறைய டிகிரிகள் படிக்கத் தொடங்கியதாகவும்,'' கூறியுள்ளார்.