கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
ராதிகா சரத்குமார் தயாரிக்கும் 'கிழக்கு வாசல்' தொடர் அதிக எதிபார்ப்புகளுக்கிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வெங்கட் ரெங்கநாதன், ரேஷ்மா முரளிதரன், அஸ்வினி ராதகிருஷ்ணா, ரோஜா ஸ்ரீ, அருண் குமார் ராஜன், சிந்து ஷ்யாம் ஆகியோருடன் பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலானது கிட்டத்தட்ட 30 எபிசோடுகளை தாண்டியுள்ள நிலையில் சொல்லிக்கொள்ளும் அளவில் டிஆர்பியில் முன்னேற்றம் அடையவில்லை.
அதேசமயம் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாக உள்ளதால் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த கிழக்கு வாசல் தொடரை மாலை 4 மணிக்கு ஒளிபரப்ப தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த சீரியல் குழுவும் அப்செட்டாகி உள்ளனர். அதிலும், சின்னத்திரையில் முதன்முதலாக என்ட்ரி கொடுத்த எஸ்.ஏ.சி இந்த நேர மாற்றத்தால் மிகவும் வருத்தம்டைந்துள்ளதாக தெரிய வருகிறது. இதன்காரணமாக அவர் சீரியலை விட்டு விலகலாம் எனவும் சின்னத்திரை வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்து வருகிறது.