ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

பிரபல சின்னத்திரை நடிகரான கார்த்தி தற்போது வானத்தைப் போல என்ற தொடரில் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் துளசியை உருகி உருகி காதலிக்கும் கார்த்தி தனது நிஜ வாழ்விலும் காயத்ரி என்ற பெண்ணை அதையும் விட உருக்கமாக காதலித்து வருகிறார். பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான காயத்ரி பல சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விருதுகள் நிகழ்ச்சி மேடையில் வைத்து கார்த்தி தனது காதலி காயத்ரிக்கு ஓப்பனாக லவ் ப்ரொபோஸ் செய்தார். அப்போதே இந்த ஜோடிக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி கார்த்தி - காயத்ரியின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக முடிந்துள்ளது. இதனையடுத்து சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.




