அப்போ தெரியலையா? வனிதாவை வெளுத்து வாங்கிய கஸ்தூரி | கார் விபத்தில் சிக்கிய ஜி.பி.முத்து : வருத்தத்தில் வெளியிட்ட வீடியோ | 17 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் சுஹாசினி படம் | முனியாண்டியின் முனி பாய்ச்சல் | ஊழலுக்கு எதிராக நிஜ வாழ்க்கையிலும் நிற்க முன்வர வேண்டும் : விஷால் | விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை : மருத்துவமனை அறிக்கை | வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா | த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி | நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம் | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்… |
பிரபல சின்னத்திரை நடிகரான கார்த்தி தற்போது வானத்தைப் போல என்ற தொடரில் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் துளசியை உருகி உருகி காதலிக்கும் கார்த்தி தனது நிஜ வாழ்விலும் காயத்ரி என்ற பெண்ணை அதையும் விட உருக்கமாக காதலித்து வருகிறார். பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான காயத்ரி பல சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விருதுகள் நிகழ்ச்சி மேடையில் வைத்து கார்த்தி தனது காதலி காயத்ரிக்கு ஓப்பனாக லவ் ப்ரொபோஸ் செய்தார். அப்போதே இந்த ஜோடிக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி கார்த்தி - காயத்ரியின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக முடிந்துள்ளது. இதனையடுத்து சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.