வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

சின்னத்திரையில் இனியா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார் நடிகை ப்ரீத்தா ரெட்டி. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சர் அனுபவித்ததால் சின்னத்திரை பக்கம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'சினிமாவில் ஆடிசனிலும் தேர்வான பிறகு ஒப்பந்தம் கையெழுத்து போடும் போது சில நிபந்தனைகளை வைப்பார்கள். அதனால் அந்த வாய்ப்பே வேண்டாம் என்று சொல்லி வந்திருக்கிறேன். சில இயக்குநர்கள் அட்ஜெஸ்மெண்ட் கேட்பார்கள். நடிக்கும் வாய்ப்பிற்காக அதை செய்தே ஆக வேண்டும் என்றால், அதையே தொழிலாக செய்யலாமே?. இதனால் தான் சினிமாவை விட்டு சீரியலுக்கு வந்துவிட்டேன். ஆனால், சின்னத்திரையில் இந்த பிரச்னை இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. எனக்கு அதுபோல் இதுவரை எதுவும் நடக்கவில்லை' என்று கூறியுள்ளார். ப்ரீத்தா தற்போது சின்னத்திரையில் சீரியல்கள் மற்றும் ஷார்ட் பிலிம்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.




