சந்தானத்திற்கு ஜோடி மீனாட்சி சவுத்ரி | தீபாவளியை குறிவைக்கும் தக் லைப் படக்குழு | ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படத்தின் புதிய அப்டேட் | பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி? | 2050ல் நடக்கும் கதையா 'தி கோட்'? | 50வது நாளில் 'அரண்மனை 4' | விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன இபிஎஸ், கமல் | நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் அலட்சியம் : சாகசம் என்ற பெயரில் சிறுவன் கையில் தீ பற்றியதால் அதிர்ச்சி | விஜய் 69 - தெலுங்கு தயாரிப்பாளர் தான் என்பது உறுதி | ராம்சரணின் புதிய படம் குறித்து அப்டேட் தகவல்களை கொடுத்த விஜய்சேதுபதி |
சின்னத்திரையில் இனியா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார் நடிகை ப்ரீத்தா ரெட்டி. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சர் அனுபவித்ததால் சின்னத்திரை பக்கம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'சினிமாவில் ஆடிசனிலும் தேர்வான பிறகு ஒப்பந்தம் கையெழுத்து போடும் போது சில நிபந்தனைகளை வைப்பார்கள். அதனால் அந்த வாய்ப்பே வேண்டாம் என்று சொல்லி வந்திருக்கிறேன். சில இயக்குநர்கள் அட்ஜெஸ்மெண்ட் கேட்பார்கள். நடிக்கும் வாய்ப்பிற்காக அதை செய்தே ஆக வேண்டும் என்றால், அதையே தொழிலாக செய்யலாமே?. இதனால் தான் சினிமாவை விட்டு சீரியலுக்கு வந்துவிட்டேன். ஆனால், சின்னத்திரையில் இந்த பிரச்னை இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. எனக்கு அதுபோல் இதுவரை எதுவும் நடக்கவில்லை' என்று கூறியுள்ளார். ப்ரீத்தா தற்போது சின்னத்திரையில் சீரியல்கள் மற்றும் ஷார்ட் பிலிம்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.