25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
இரட்டை சகோதரிகளான அருணா மற்றும் அகிலாவை அவரது பாட்டி தான் கோயில்களில் நடக்கும் இசை வகுப்புகளில் சேர்ந்துள்ளார். அதன்பின் படிப்படியாக இசையை கற்றுக்கொண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருணா, தனது திறமையால் இறுதிபோட்டிக்கும் தேர்வானார். பானை செய்யும் குடும்பத்தை சேர்ந்த அவர் ஒருமுறை எபிசோடில் பேசிய போது கோயில்களில் பாடச் செல்லும் போது தாங்கள் சந்திக்கும் சாதிய ரீதியான அழுத்தங்கள் குறித்து சோகத்துடன் கூறியிருந்தார். இன்று அதேமேடையில் டைட்டில் பட்டம் வென்றதுடன், சூப்பர் சிங்கர் வரலாற்றிலேயே டைட்டில் பட்டம் வென்ற முதல் பெண் என்ற சாதனையையும் அருணா படைத்துள்ளார். இசைக்கு சாதி, மதம் கிடையாது என்பதை சாதி வெறியர்கள் தலையில் ஆணி அடித்தது போல் சாதித்து காட்டிய அருணாவுக்கு மக்கள் பெரும்பாலானோர் தங்கள் அன்புகளை பகிர்ந்து வருகின்றனர். இசை மட்டுமல்லாது பாடல் வரிகளும் எழுதும் திறன் கொண்ட அவரை தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.