தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல செய்திவாசிப்பாளரான மெர்சி சித்ரா அண்மையில் வெளியான துணிவு படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடி வரும் மெர்சி சித்ரா, சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சர் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், அவர் 'மீடியாவிற்குள் நான் வரும் போது இப்படியெல்லாம் நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால், தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது எனக்கு எந்த பிரச்னையும் நடக்கவில்லை. எனவே தைரியத்துடன் சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்தேன். பலவிதமான எதிர்ப்புகள் வந்தது. சிலர் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றார்கள், சிலர் தவறாக பேசினார்கள், சிலர் இதை செய்தால் தான் வாய்ப்பு என்றார்கள். இப்படி மறைமுகமாகவும் நேரடியாகவும் அட்ஜெஸ்மெண்ட் கேட்டார்கள். அட்ஜெஸ்மெண்ட் செய்யவில்லை என்றால் சிலர் போட்டோவில் நான் நன்றாக இருப்பதாகவும் நேரில் கருப்பாக இருப்பதாகவும் விமர்சித்து ஒதுக்கினார்கள். இப்படி பல தடைகளை தாண்டி தான் துணிவு படத்தில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது' என்று அதில் கூறியுள்ளார். மீடியாவில் செய்திவாசிக்கும் ஒரு பெண்ணுக்கே இப்படி என்றால், எளிய பின்னணியில் இருந்து சினிமா கனவோடு வரும் பெண்களின் நிலை தான் என்ன?