புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிரபல செய்திவாசிப்பாளரான மெர்சி சித்ரா அண்மையில் வெளியான துணிவு படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடி வரும் மெர்சி சித்ரா, சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சர் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், அவர் 'மீடியாவிற்குள் நான் வரும் போது இப்படியெல்லாம் நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால், தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது எனக்கு எந்த பிரச்னையும் நடக்கவில்லை. எனவே தைரியத்துடன் சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்தேன். பலவிதமான எதிர்ப்புகள் வந்தது. சிலர் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றார்கள், சிலர் தவறாக பேசினார்கள், சிலர் இதை செய்தால் தான் வாய்ப்பு என்றார்கள். இப்படி மறைமுகமாகவும் நேரடியாகவும் அட்ஜெஸ்மெண்ட் கேட்டார்கள். அட்ஜெஸ்மெண்ட் செய்யவில்லை என்றால் சிலர் போட்டோவில் நான் நன்றாக இருப்பதாகவும் நேரில் கருப்பாக இருப்பதாகவும் விமர்சித்து ஒதுக்கினார்கள். இப்படி பல தடைகளை தாண்டி தான் துணிவு படத்தில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது' என்று அதில் கூறியுள்ளார். மீடியாவில் செய்திவாசிக்கும் ஒரு பெண்ணுக்கே இப்படி என்றால், எளிய பின்னணியில் இருந்து சினிமா கனவோடு வரும் பெண்களின் நிலை தான் என்ன?