நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ள விஜய் | ரஷ்யா பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | நான் உயிருடன் இருக்கிறேன் : பார்வதி நாயர் திடீர் பதிவு | மார்பிங் புகைப்படத்தால் ரொம்பவும் கஷ்டப்பட்டேன் - கேப்ரில்லா பேட்டி | மகனை பெற்றெடுத்த ஸ்ரீவித்யா நஞ்சன் | கார்த்திக் ராஜ் தவறனாவரா? - மீரா கிருஷ்ணன் சொன்னது என்ன? | கோமல் சர்மாவுக்கு கிடைத்த கோல்டன் விசா | கேன்ஸ் திரைப்பட விழாவை கலக்கிய இந்திய பெண்கள் | பிளாஷ்பேக்: அண்ணன், தங்கை பாசத்தின் அடையாளம் 'பாசமலர்' | 'கேம் சேஞ்சர்' பற்றி நிறைய பேச ஆசை, ஆனால் முடியாது - அஞ்சலி |
சின்னத்திரை நடிகை ரச்சிதா மஹாலெட்சுமிக்கு 'சரவணன் மீனாட்சி' தொடருக்கு பின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. தொலைக்காட்சி சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து கடந்த 2013 ஆண்டும் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையில் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து கடந்த சில மாதங்களாக தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனியே வாழும் பெண்களும் வேலை செய்யும் பெண்களும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற உத்தரவை பாம்பே உயர்நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. அந்த தீர்ப்பை வரவேற்று இன்ஸ்டாகிராமில், 'இதுபோதும். இனி இதிலிருந்து பார்த்துகொள்ளலாம்' என ரச்சிதா பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே சொன்னது போல் ரச்சிதா குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார் என்பது இந்த பதிவின் மூலம் தெரியவருகிறது.