தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

சின்னத்திரை நடிகை ரச்சிதா மஹாலெட்சுமிக்கு 'சரவணன் மீனாட்சி' தொடருக்கு பின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. தொலைக்காட்சி சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து கடந்த 2013 ஆண்டும் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையில் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து கடந்த சில மாதங்களாக தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனியே வாழும் பெண்களும் வேலை செய்யும் பெண்களும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற உத்தரவை பாம்பே உயர்நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. அந்த தீர்ப்பை வரவேற்று இன்ஸ்டாகிராமில், 'இதுபோதும். இனி இதிலிருந்து பார்த்துகொள்ளலாம்' என ரச்சிதா பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே சொன்னது போல் ரச்சிதா குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார் என்பது இந்த பதிவின் மூலம் தெரியவருகிறது.




