படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் | ஏ.ஆர் ரஹ்மானை ஆனந்த கண்ணீர் விட வைத்த மலையாள சூப்பர் சிங்கர் | ஆஸ்கர் விருது பட நாயகனிடம் ஒப்படைக்கப்பட்ட தர்மபுரி யானைக்குட்டி | ஆதிபுருஷ் மீதான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | டுவிட்டர் சாட்டிங்கில் வந்தியத்தேவனும், குந்தவையும்… | ஒரு பாட்டுக்கு ஆடிய ஆர்யா மனைவி சாயிஷா |
மிஸ் தமிழ்நாடு, மிஸ்சஸ் தமிழ்நாடு, சவுத் இந்தியா ஆகிய நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளரான ஜோ மைக்கேல் ப்ரவீன், பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் இதுகுறித்து அவர் எழுதிய பதிவில், வெளிநாடு வாழ் பெண் ஒருவரிடம் பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் முருகதாஸ் சேர்ந்து 15 லட்சம் வரை சிறிது சிறிதாக பணம் வாங்கியுள்ளதாகவும், அதை திருப்பி கேட்டபோது அந்த பெண்ணை அநாகரீகமான வார்த்தைகள் பேசி திட்டி மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் ஜோ மைக்கேல் ப்ரவீனை அனுகி ஆதாரத்தை கொடுத்து உதவி கேட்டுள்ளார். அவரும் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமையை விரிவாக எழுதி, பாலாஜி முருகதாஸ் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டும் ஆடியோவையும் ரிலீஸ் செய்துள்ளார். தவிரவும் சட்ட ரீதியான உதவியை அந்த பெண்ணுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இருப்பினும் முதலில் தைரியமாக புகார் அளித்த அந்த பெண் தற்போது பின்வாங்குவதாகவும், அவரை சகோதரர்கள் இருவரும் சேர்ந்து மிரட்டியுள்ளதாகவும் ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார்.
பாலாஜி முருகதாஸ் குறித்த இந்த குற்றச்சாட்டானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.