‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ஊடகங்களில் அரசியல் நெறியாளராக பணிபுரிந்து பிரபலமான விக்ரமன் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் உறுப்பினாராக சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீசனின் ஆரம்பம் முதலே தனது ஸ்டைலில் சிறப்பாக விளையாடி வந்த விக்ரமனுக்கு பொதுமக்கள் மத்தியில் பெருமளவு ஆதரவு இருந்தாலும், சில சமயங்களில் விக்ரமன் சற்று அதிகமாக அரசியல் பேசுவதாக விமர்சனங்களும் எழுந்து வந்தது. இதைதான் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதாவும் 'எண்டர்டெயின்மெண்ட் கேம் ஷோவில் அரசியல்வாதிக்கு என்ன வேலை?' என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றியாளர்கள் என்பதை காண உலக அளவில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்காக கடுமையான ஓட்டுசேகரிப்பும் நடைபெற்று வருகிறது. இதில், விக்ரமனுக்காக அவர் சார்ந்துள்ள கட்சி உறுப்பினர்கள் ஓட்டு சேகரித்தனர். இது பிக்பாஸ் நேயர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அந்த கட்சியின் தலைவர் திருமாவளவனும் விக்ரமனுக்காக ஆதரடு தெரிவித்து டுவீட் போட்டுள்ளார்.
இதனை விமர்சித்துள்ள வனிதா, 'ஒரு ரியாலிட்டி ஷோவில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. ஒரு தலைவர் அவரது கட்சிக்காரருக்காக ஓட்டு கேட்பதால் நிகழ்ச்சியையே பார்க்காத அந்த கட்சிக்காரர்கள் பெருமளவில் ஓட்டு செலுத்துவார்கள். இது முற்றிலும் முறையற்ற செயல்' என்று விமர்சித்துள்ளார். இதனையடுத்து வனிதாவின் விமர்சனத்திற்கு ஆதரவாக பொதுமக்களும், எதிராக அரசியல் சார்புடையவர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.