லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. போட்டியாளர்களுக்கான தேர்வும் சூடுபிடித்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை 9 ஆண் போட்டியாளர்கள், 8 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 17 பேர் போட்டியாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இதில் சினேகா, ப்ரியா என்ற இரட்டை சகோதரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வானது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சினேகா, ப்ரியாவை விட திறமையான போட்டியாளர்கள் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டதாகவும் ஆனால், டிஆர்பிக்காக விஜய் டிவி இரட்டையர்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் பரவலாக சோஷியல் மீடியாவி பேசப்பட்டு வருகிறது. எனினும், சிலருக்கு இரட்டையர்களின் என்ட்ரி ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர் ஏற்கனவே பின்னணி பாடகர்களாவும் இருப்பதால் இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சூப்பர் சிங்கர் சீசன் 9 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.