'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. போட்டியாளர்களுக்கான தேர்வும் சூடுபிடித்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை 9 ஆண் போட்டியாளர்கள், 8 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 17 பேர் போட்டியாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இதில் சினேகா, ப்ரியா என்ற இரட்டை சகோதரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வானது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சினேகா, ப்ரியாவை விட திறமையான போட்டியாளர்கள் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டதாகவும் ஆனால், டிஆர்பிக்காக விஜய் டிவி இரட்டையர்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் பரவலாக சோஷியல் மீடியாவி பேசப்பட்டு வருகிறது. எனினும், சிலருக்கு இரட்டையர்களின் என்ட்ரி ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர் ஏற்கனவே பின்னணி பாடகர்களாவும் இருப்பதால் இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சூப்பர் சிங்கர் சீசன் 9 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.