ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிக்பாஸ் வீட்டில் என்ட்ரியாகியுள்ள அசீம் ஆரம்பம் முதலே அடாவடியாகவும், அதிகாரத்தை செலுத்தும் போக்குடனும் நடந்து கொண்டு வருகிறார். குறிப்பாக பெண் போட்டியாளர்களை மட்டம் தட்டி பேசுவதும், ஆண் போட்டியாளர்களிடம் திமிராக தள்ளுமுள்ளு சண்டையிட்டு ஒடுக்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். இந்தவாரத்தில் கூட அமுதவாணை கோபத்தில் அடித்து தள்ளிவிட்டு பின் மண்ணிப்பு கேட்டிருக்கிறார்.
இந்நிலையில், நடிகை சுபத்ரா அளித்துள்ள பேட்டியில் அவர் அசீம் குறித்து கூறிய கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது. சுபத்ரா 'பூவே உனக்காக' சீரியலில் அசீமுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அசீமுக்கும் ஹீரோயினுக்கும் ஒருமுறை பயங்கர சண்டை நடந்ததாகவும் அதற்குப்பின் தேவிப்பிரியாவுடனும் அசீம் சண்டையிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அவருக்கு முன்னால் யார் கைநீட்டி பேசினாலும் கோபாமாகிவிடுவார், சண்டை போடுவார். இப்போது பிக்பாஸ் வீட்டில் அவர் எப்படியிருக்கிறாரோ அதுதான் அவரது உண்மையான முகம் என்றும் கூறியுள்ளார். முன்னதாக அசீமின் சக நடிகரான அருண் ராஜனும் அசீம் குறித்து இதே கருத்துகளை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.