பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
சின்னத்திரை பிரபலங்களான ரச்சிதா மஹாலெட்சுமியும் தினேஷூம் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பலவருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதுகுறித்து நடிகர் தினேஷ் கூட சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்திருந்தார். எனினும், தங்கள் பிரிவு தற்காலிகமானது தான் எனவும் விரைவில் காலம் அனைத்தையும் சரி செய்யும் என்ற தொனியில் அதில் பேசியிருந்தார்.
இந்நிலையில், சீரியல்களில் தொடர் சறுக்கல்களை சந்தித்து வரும் ரச்சிதா தற்போது அதிரடியாக பிக்பாஸில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனையடுத்து தினேஷ், 'பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பல ரசிகர்களின் இதயங்களை வெல்ல வாழ்த்துகள்' என பதிவிட்டுள்ளார். பிரிந்து இருந்தாலும் காதல் மனைவியின் மேல் அன்பாக இருக்கும் தினேஷின் குணத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.