திடீர் இயக்குனரான ஜோதி கிருஷ்ணா | ஒரு நொடி இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் | 22 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கிய கே.ரங்கராஜ் | கொளுத்தும் வெயிலில் காத்திருந்த சிறுவர்கள் ஏமாற்றம் : மன்னிப்பு கேட்ட பிரபுதேவா | சினிமா பற்றி சினிமா எடுத்தால் ஓடாதா? : கவின் ஆதங்கம் | சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை காவ்யா அறிவுமணி. சித்ராவுக்கு பின் முல்லை கதாபாத்திரத்தில் மாற்றம் செய்யப்பட்ட காவ்யா விரைவிலேயே ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். தற்போது குமரன் - காவ்யா கெமிஸ்ட்ரி ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது.
இந்நிலையில், காவ்யா கடந்த மாதத்துடன் சீரியலை விட்டு விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அதை அதிகாரப்பூர்வமாக காவ்யாவும் தனது தெரிவித்துள்ளார். அதேசமயம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் முல்லை கேரக்டரில் யார் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் ஆவல் எழுந்தது.
தற்போது முல்லை கதாபாத்திரத்தில் 'சிப்பிக்குள் முத்து' தொடரின் நாயகி லாவாண்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'சிப்பிக்குள் முத்து' ஒளிபரப்பான சில மாதங்களுக்குள்ளாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு அண்மையில் முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும் ரசிகர்கள் மனதில் மிகக்குறுகிய காலத்திலேயே இடம்பிடித்த லாவண்யா முல்லை கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் தான் என சின்னத்திரை ரசிகர்கள் பேசி வருகின்றனர்.