ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை காவ்யா அறிவுமணி. சித்ராவுக்கு பின் முல்லை கதாபாத்திரத்தில் மாற்றம் செய்யப்பட்ட காவ்யா விரைவிலேயே ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். தற்போது குமரன் - காவ்யா கெமிஸ்ட்ரி ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது.
இந்நிலையில், காவ்யா கடந்த மாதத்துடன் சீரியலை விட்டு விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அதை அதிகாரப்பூர்வமாக காவ்யாவும் தனது தெரிவித்துள்ளார். அதேசமயம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் முல்லை கேரக்டரில் யார் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் ஆவல் எழுந்தது.
தற்போது முல்லை கதாபாத்திரத்தில் 'சிப்பிக்குள் முத்து' தொடரின் நாயகி லாவாண்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'சிப்பிக்குள் முத்து' ஒளிபரப்பான சில மாதங்களுக்குள்ளாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு அண்மையில் முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும் ரசிகர்கள் மனதில் மிகக்குறுகிய காலத்திலேயே இடம்பிடித்த லாவண்யா முல்லை கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் தான் என சின்னத்திரை ரசிகர்கள் பேசி வருகின்றனர்.