மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
சினிமாவில் வெற்றி பெற்ற வேறுமொழி படங்கள் ரீமேக் செய்யப்படுவது போன்று தொலைக்காட்சி தொடர்களிலும் ரீமேக் அதிகரித்துள்ளது. பெங்காலி மொழியில் வெளியான தொடர் திரிணாயினி, இந்த தொடர் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. அதன் பிறகு தற்போது மாரி என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த தொடர் விரைவில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.
இந்த சீரியலில் மாரி என்ற கதாபாத்திரத்தில் தெலுங்குவில் நாயகியாக நடித்த ஆஷிகா, தமிழ் பதிப்பிலும் நாயகியாக நடிக்கிறார். அபிதா மாரியின் அம்மாவாக நடிக்க டெல்லி கணேஷ் தாத்தா வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் வனிதா விஜயகுமார், பாண்டிராஜன் உள்பட பலர் நடிக்கிறார்கள். மாரிக்கு நடக்க போவதை முன்கூட்டியே அறியும் ஒரு அபாரா சக்தி இருக்கிறது. ஆனால் இது இவருக்கு கடவுள் கொடுத்த வரமா சாபமா என்பதுதான் கதை.