பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிஷா கணேஷ். தொடர்ந்து வள்ளி, தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் திரையில் பெரிதாக தோன்றாத அவர் கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்திருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சீரியலில் என்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிஷா வக்கீல் உடையுடன் போட்டோவையும் 'கீதா சுப்பிரமணியன்' என்ற அவரது கதாபாத்திரத்தின் பெயரையும் வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார். இருப்பினும் அவர் எந்த சீரியலில் நடிக்கிறார் என்பது குறித்து அந்த பதிவில் வெளியிடவில்லை. அதேசமயம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் தான் நிஷா கணேஷ் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தவாரம் முதல் அவர் இந்த தொடரில் இடம் பெற உள்ளார்.