இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிஷா கணேஷ். தொடர்ந்து வள்ளி, தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் திரையில் பெரிதாக தோன்றாத அவர் கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்திருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சீரியலில் என்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிஷா வக்கீல் உடையுடன் போட்டோவையும் 'கீதா சுப்பிரமணியன்' என்ற அவரது கதாபாத்திரத்தின் பெயரையும் வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார். இருப்பினும் அவர் எந்த சீரியலில் நடிக்கிறார் என்பது குறித்து அந்த பதிவில் வெளியிடவில்லை. அதேசமயம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் தான் நிஷா கணேஷ் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தவாரம் முதல் அவர் இந்த தொடரில் இடம் பெற உள்ளார்.