நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ் சேனல்களை பொறுத்தமட்டில் சீரியல்கள் மற்றும் விதவிதமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ள கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனமும் முன்னணி சேனல்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இரண்டு சீரியல்களை வாங்கி ஒளிபரப்புவதன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை கலர்ஸ் தமிழ் சேனல் பக்கம் திருப்ப முடியும் என முடிவெடுத்துள்ளது. இதற்காக ஏற்கனவே ஒளிபரப்பாகி ஹிட் அடித்த 'கோலங்கள்' மற்றும் 'தென்றல்' ஆகிய தொடர்களை மறுஒளிபரப்பு செய்யும் உரிமையை கலர்ஸ் தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி வருகிற 16ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 1 மணிக்கு கோலங்கள் சீரியலும், 2 மணிக்கு தென்றல் சீரியலும் ஒளிபரப்பாகவுள்ளது.