ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழில் ஒளிபரப்பான அண்ணாமலை, கோலங்கள், மந்திரவாசல் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து பிரபலமானவர் மஞ்சரி. மஞ்சரிக்கு தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த போதிலும் அவர் தொடர்ந்து சீரியலில் நடிக்கவில்லை. அதற்கு காரணம் மஞ்சரி சிங்கப்பூரில் வசித்து வந்தார். சீரியல் ஷூட்டிங் பொழுதுகளில் மட்டும் தமிழகம் வந்து நடித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஊடகத்தில் பேட்டி கொடுத்துள்ள அவர், மொட்டத்தலையுடன் காட்சியளிக்கிறார். இதற்கு காரணம் என்ன? என்று அவரிடம் கேட்ட போது, 'சிங்கப்பூரில் குழந்தைகள் கேன்சர் சொசைட்டி உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது தலைமுடி உதிர்ந்துவிடும். அவர்களுக்கு நிறையபேர் முடியை தானமாக கொடுப்பார்கள். நானும் வருடத்திற்கு ஒரு முறை எனது முடியை அந்த குழந்தைகளுக்கு டொனேஷன் செய்து வருகிறேன்' என்று கூறியுள்ளார். மஞ்சரியின் இந்த செயலை தற்போது பலரும் வாழ்த்தி வருகின்றனர்.