நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல் 'யாரடி நீ மோகினி'. இதில் ஹீரோவாக ஸ்ரீகுமாரும், வில்லியாக சைத்ரா ரெட்டியும் அசத்தியிருந்தனர். அதிலும் சைத்ரா ரெட்டியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. ரசிகர்களின் பெருத்த ஆதரவுக்கு மத்தியில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற அந்த தொடர் சில மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவுற்றது. இந்நிலையில் சைத்ரா ரெட்டியும், ஸ்ரீகுமாரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சேர்ந்து எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைபார்த்துவிட்டு இருவரும் புது சீரியலில் நடிக்கிறார்களா? அல்லது யாரடி நீ மோகினி சீசன் 2 வருகிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், உண்மையில் அவர்கள் எந்த புதிய சீரியலிலும் சேர்ந்து நடிக்கவில்லை. யாரடி நீ மோகினி முடிவுற்ற பின் சைத்ரா ரெட்டி 'கயல்' தொடரிலும், ஸ்ரீகுமார் 'வானத்தைப் போல' தொடரிலும் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு தொடர்களுமே ஒரே டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள். எனவே, ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து கொண்ட இருவரும் நட்பின் அடிப்படையில் செல்பி எடுத்துக் கொண்டு பகிர்ந்துள்ளனர்.