எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா |

சின்னத்திரை பிரபலங்களான நவீன் குமார் - கண்மணி சேகரின் நிச்சயதார்த்த வைபவம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. கலர்ஸ் தமிழின் 'இதயத்தை திருடாதே' சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் நவீன் குமார். இவருக்கும் அதே தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் ஹீமா பிந்துவுக்கு காதல் என இணையத்தில் அடிக்கடி கிசுகிசுக்கள் வெளி வந்தது. ஆனால், இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்றே சில நேர்காணல்களில் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நவீன் குமார் செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகரனை காதலிப்பதாக அறிவித்தார். இதனையடுத்து இந்த காதல் ஜோடிகளின் கதை பலவாறாக இணையத்தில் பேசப்பட்டு வந்தது. தற்போது இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. நவீன் மற்றும் கண்மணி என இருவருக்கும் ரசிகர்கள் அதிகம் என்பதால் இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சக நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




