லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பிரபல சீரியல் நடிகர் நவீன் குமாருக்கும், செய்திவாசிப்பாளர் கண்மணி சேகருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சோஷியல் மீடியாவில் இருவருக்குமே அதிக பாலோயர்கள் இருப்பதால் இவர்கள் வெளியிடும் அப்டேட்டுகள் விரைவிலேயே வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், தனது வருங்கால மனைவியுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ள நவீன் குமார் அங்கே காவடி தூக்கி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். அங்கே இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை நவீன் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதை பார்த்துவிட்டு 'எப்போது திருமணம். சீக்கிரம் அடுத்த அப்டேட் விடுங்க' என கேட்டு வருகின்றனர்.
நவீன் குமார் கலர்ஸ் டிவியின் 'இதயத்தை திருடாதே' சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். நவீன்குமார் அதில் நடிக்கும் சக நடிகையான ஹீமா பிந்துவை காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தது. ஆனால் நவீன் கண்மணியுடனான காதலை வெளிப்படையாக அறிவித்தார். அவர்களுக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.