கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
சின்னத்திரையின் சரண்யா பொன்வண்ணன் என்று பெயரெடுக்கும் அளவிற்கு அழகிய அம்மா நடிகையாக வலம் வருகிறார் சீரியல் நடிகை கிருபா. ஆனால், இவர் நடிக்க வருவதற்கு முன் ஹெச்ஆராக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையிலிருந்து சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ள கிருபாவை பற்றி சில தகவல்களை இதில் பார்க்கலாம்.
நடிகை கிருபா நடிக்க வருவதற்கு முன் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆச்சி மசாலா கம்பெனியில் ஹெச் ஆராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள் ஒரு மகன் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் 10 வருடங்கள் கணவரோடு சேர்ந்து வாழ்ந்த கிருபா, தற்போது கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
ஆச்சி மசாலா கம்பெனியில் ஹெச் ஆராக இருந்ததால் சில விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிருபாவுக்கு வந்தது. அந்த வாய்ப்புகளை கிருபா பயன்படுத்திக் கொண்டதன் மூலம், விஜய் டிவியிலிருந்து அம்மா கேரக்டரில் நடிக்க அழைப்பு வந்தது. குழந்தைகளிடம் இதுகுறித்து கேட்க, அவர்களோ, 'உங்களுக்கு விருப்பம்னா பண்ணுங்கம்மான்னு'என நம்பிக்கையளிக்க, ஹெச் ஆர் வேலையை விட்டுவிட்டு நடிகரானார் கிருபா.
கிருபா தற்போது ‛பூவே உனக்காக', விஜய் டிவியின் ‛ஈரமான ரோஜாவே 2' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். மேலும், சினிமாவில் ‛மெர்சல்', ‛மாநாடு' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.