‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க் வந்துவிட்டது. அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை பெற்று வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. இதற்கிடையில் போட்டியாளர்கள் மினிமம் கேரண்டியுடன் பணத்தை எடுத்துக் கொண்டு போட்டியிலிருந்து விலகும் வகையில் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்படும். சென்ற சீசனில் சரத்குமார் பணப்பெட்டி டாஸ்க்கை ஆரம்பித்து வைத்தார்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் 6 லட்சம் பணத்துடன் பணப்பெட்டி வீட்டினுள் இருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் மாறி மாறி பணப்பெட்டியை பார்த்துவிட்டு செல்கின்றனர். அதன்பிறகு அதிலிருக்கும் தொகை சிறிது சிறிதாக அதிகரித்து 8 லட்சமாக இருக்கிறது. சென்ற முறை ரசிகர்கள் பலரும் தாமரையை பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறும் படி அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், தாமரை இறுதிவரை விளையாடினார். இப்போது வெளியாகியுள்ள ப்ரோமோவிலும் தாமரை பணப்பெட்டியில் அக்கறை காட்டுவது போல் தெரியவில்லை. ப்ரோமோவின் முடிவில் ஜூலி மட்டும் 8 லட்சம் இருக்கும் பணப்பெட்டியின் முன் உட்கார்ந்திருக்கிறார். இந்நிலையில் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார்? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.