சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | 'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் | மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் |
ஜீ தமிழில் ஒளிபரப்பான தொடர்களிலேயே அதிக வரவேற்பு பெற்று, அந்த சேனலுக்கு ஒரு பெரிய அடையாளத்தை கொடுத்தது என்றால் அது செம்பருத்தி தொடர் தான். இதில், கார்த்திக் ராஜ், ஷபானா, ப்ரியா ராமன், ஊர்வம்பு லெட்சுமி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் கிட்டத்தட்ட 5 வருடங்களில் 1250 எபிசோடுகள் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் தற்போது நிறைவு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செம்பருத்தி தொடர் நிறைவு பெற போவதாக வரும் தகவல் முதல் முறை இல்லை. 7 மாதங்களுக்கு முன்பே இந்த தொடர் முடித்து வைத்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் கதையின் மெயின் லீடாக நடித்து வந்த கார்த்திக் ராஜ் தொடரை விட்டு விலகினார். எனவே, டிஆர்பி மிகப்பெரிய அளவில் அடி வாங்கியது. அதன்பிறகு அக்னி நடிக்க ஆரம்பித்தார். தற்போது தொடரை முடித்து வைக்க தயாரிப்பு மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் சேர்ந்து முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செம்பருத்தி தொடர் மிக விரைவில் முடிவுக்கு வரும் பட்சத்தில், ஜீ தமிழ் புதிதாக மூன்று சீரியல்களை ரிலீஸ் செய்ய உள்ளது. அதில், தவமாய் தவமிருந்து தொடர் செம்பருத்தியின் இடத்தை பிடிக்கும் என எதிபார்க்கப்படுகிறது.