புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பிக்பாஸ் சீசன் 5 முடிந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும் பிக்பாஸ் சீசன் 5-ல் விளையாடிய பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் டாப்பிக்காக இடம் பிடித்து வருகின்றனர். இதில் பிக்பாஸ் சீசன் 5ல் விளையாடிய பிரியங்கா, பாவனி ரெட்டி, வருண், சிபி மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோரின் நட்பு பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. சீசன் 5 நிகழ்ச்சிக்கு பிறகு தங்கள் நட்பை வெளிக்காட்டும் வகையில் அடிக்கடி சந்தித்து கொள்கின்றனர். தற்போது மீண்டும் ஒரு ரீயூனியனை போட்டுள்ள இந்த நட்புக்குழு சென்னையில் ஏதோ ஒரு சாலையில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. முன்னதாக ஐதராபாத்தில் இந்த நண்பர்கள் கூட்டம் ஒன்று கூடிய போது, ஆங்கர் ப்ரியங்கா, பன்னாக சில சேட்டைகள் செய்து விளையாடிய வீடியோக்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.