'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
பிக்பாஸ் சீசன் 5 முடிந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும் பிக்பாஸ் சீசன் 5-ல் விளையாடிய பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் டாப்பிக்காக இடம் பிடித்து வருகின்றனர். இதில் பிக்பாஸ் சீசன் 5ல் விளையாடிய பிரியங்கா, பாவனி ரெட்டி, வருண், சிபி மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோரின் நட்பு பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. சீசன் 5 நிகழ்ச்சிக்கு பிறகு தங்கள் நட்பை வெளிக்காட்டும் வகையில் அடிக்கடி சந்தித்து கொள்கின்றனர். தற்போது மீண்டும் ஒரு ரீயூனியனை போட்டுள்ள இந்த நட்புக்குழு சென்னையில் ஏதோ ஒரு சாலையில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. முன்னதாக ஐதராபாத்தில் இந்த நண்பர்கள் கூட்டம் ஒன்று கூடிய போது, ஆங்கர் ப்ரியங்கா, பன்னாக சில சேட்டைகள் செய்து விளையாடிய வீடியோக்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.