'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

'நாயகி' தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சுஷ்மா நாயர். சமீபத்தில் அவர் தனது காதலர் லிஜோ டி ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு கேப் விட்டிருந்தார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்துள்ள அவர், ஜீ தமிழின் 'என்றென்றும் புன்னகை' தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய் டிவியின் 'செந்தூரப்பூவே' தொடர் மீண்டும் ஒளிபரப்ப தொடங்கியுள்ளது. அதில், வில்லி கதாபாத்திரத்தில் சுஷ்மா நாயர் என்ட்ரி கொடுக்கிறார். முன்னதாக அந்த கதாபாத்திரத்தில் தர்ஷா குப்தாவும் அதன்பிறகு சந்தியா ராமசந்திரனும் நடித்து வந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகிவிட்டதால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சுஷ்மா நாயர் நடித்து வருகிறார்.




