ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு | அது என்னுடைய கார் அல்ல ; ஷாஜி கைலாஷ் விளக்கம் | 6 வருடமாக டார்ச்சர் கொடுத்த விமர்சகர் ; நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சின்னத்திரையில் செல்ல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி என்ற டிடி. தற்போது சினிமாவில் நடிப்பது குறித்து கவனம் செலுத்தி வரும் டிடி, சமீபத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக மீண்டும் சின்னத்திரை வந்துள்ளார். எப்போதும் குழந்தை தனத்துடன் ஜாலியாக போஸ்ட் போட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் டிடி, சமீபத்தில் வீல்சேரில் இருப்பது போல் போட்டை ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்து அவருக்கு ஆக்ஸிடண்ட் ஆகிவிட்டதா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதற்கு விளக்கமளித்துள்ள டிடி, 'எனக்கு முடக்குவாதம் இருப்பதால் நீண்ட தூரம் நடக்க முடியாது அதற்காக தான் வீல் சேர் பயன்படுத்தினேன். ஆனால் இந்த முடக்குவாதத்தால், எனக்குள் இருக்கும் குழந்தை தன்மையை ஒருபோதும் தடுக்க முடியாது' என கூறியுள்ளார்.
ஒருபுறம் டிடிக்கு முடக்குவாதம் என்று தெரிந்தவுடன் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், அதேசமயம் டிடி அதை பாசிட்டிவாக அணுகுவதை கண்டு பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
டிடி தற்போது விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' பிக்பாஸ் வருணின் 'ஜோஷ்வா இமை போல் காக்க' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.