22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா தென்னிந்திய மொழிகளின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யாவுக்கு சூர்யாவின் ஆறு படத்தில் நடித்த சவுண்ட் சரோஜா கதாபாத்திரம் நீண்ட நாளுக்கு பிறகு கம்பேக்காக அமைந்தது. தொடர்ந்து தற்போதும் அவ்வப்போது தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது மகள் அனன்யாவுடன் சமீபத்தில் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலான போது மீடியாக்களின் பார்வை மீண்டும் ஐஸ்வர்யா பக்கம் திரும்பியது. இதனால் அவருக்கு தற்போது சீரியலில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது.
ஐஸ்வர்யா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'நினைத்தாலே இனிக்கும்' என்ற புதிய சீரியலில் இணைந்துள்ளார். ஐஸ்வர்யா, நினைத்தாலே இனிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்ற நடிகர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்துவரும் எபிசோடுகளில் அவரது முக்கியத்துவம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.