சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மானசா சீரியலை விட்டு விலகுவதாக தகவல் வந்துள்ள நிலையில் கதையை மாற்றி நடிப்பை தொடரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் ராஜா ராணி முதல் சீசனில் நடித்த ஆல்யா மானசா, அதில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு சின்னத்திரைக்கு இடைவெளி விட்ட ஆல்யா தற்போது ராஜா ராணி சீசன் 2 வில் ஹீரோயினாக சந்தியா கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக உள்ள செய்தி சமீபத்தில் வெளியானது. அதேசமயம் ராஜா ராணி 2வில் அவரது கதாபாத்திரம் போலீஸ் கதாபாத்திரம் என்பதால் சீரியலை மேற்கொண்டு தொடர முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 'சந்தியா கதாபாத்திரம் இப்போது தான் ஐபிஎஸ் தேர்வுக்கு தயாரகி வருகிறது. எனவே, இன்னும் சில நாட்கள் சந்தியா போலீஸ் ஆவது போல் காட்டாமல் அவர் கர்ப்பமாக இருப்பது போல் காட்டினால் சீரியலில் தொடர்ந்து நடிக்கலாம்' என்று ஆல்யா சீரியல் குழுவிற்கு ஐடியா கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
இதனையடுத்து ஹிந்தியில் வரும் மூலக்கதை போல் அல்லாமல் கதையில் டுவிஸ்ட் அடித்து சந்தியா கர்ப்பமாக இருப்பது போல் சீரியலில் காட்ட போவதாக சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் கதையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.