சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
பிக்பாஸ் வீட்டில் நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு நபராக எலிமினேட் ஆகி வருகின்றனர். இதன் காரணமாக மீதமிருக்கும் நபர்களுக்கு தாங்கள் எலிமினேட் ஆகி விடுவோமோ என்ற பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குழுக்களாக பிரிந்து சண்டைகளும் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் வீட்டின் தலைவராக இமான் அண்ணாச்சி தான் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால், நிரூப் தனது சலுகையை பயன்படுத்தி வீட்டின் தலைவராக மாறிவிட்டார். நிரூப் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொன்ன அண்ணாச்சி தோல்வி பயத்தால் நிரூப்பை வாயா போயா என்று பேசிவிட்டார். மேலும், 'பவரை அவங்க மிஸ் யூஸ் பண்ணுவாங்க. இதை வச்சு பழி வாங்குவாங்க' என்று இமான் அண்ணாச்சி பேசியுள்ளார். நிரூப்பின் தலைமையை ஏற்க விரும்பாத வருண் அண்ணாச்சி டீமில் சேர்ந்து ஓவர் பெர்பார்மென்ஸ் செய்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் எலிமினேட் ஆகாமல் இருக்க போட்டியாளர்கள் அனைவரும் தற்போது மக்களின் ஓட்டுகளையே நம்பி வருகின்றனர். எனவே அதிக ஓட்டுகளை வாங்குவதற்காக முயற்சிகளும் எடுத்து வருகின்றனர். தோல்வி பயம் ஒருவரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பது போல பிக்பாஸ் வீட்டில் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது.