அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

ஹீரோக்களுடன் சேர்ந்து டூயட் பாடும் கதாநாயகி என்பதைவிட கதையை தாங்கிப்பிடிக்கும் கதாநாயகியாக நடிகவே ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படி இல்லையா கதையின் திருப்பத்துக்கு தேவையான முக்கியமான பாத்திரமாகவோ, ரசிகர்களின் மனதில் தாக்கம் ஏற்படும் பாத்திரமாகவோ அது இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனால் தான் சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் ராணா இணைந்து நடிக்கும் படத்தில் நடிப்பதற்கு தேடி வந்த வாய்ப்பை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
காரணம் அந்தப்படத்தில் ராணாவுக்கு ஜோடியாக அவரை நடிக்க அழைத்தனர். ஆனால் அந்த பெண் கதாபாத்திரம் திரையில் சில காட்சிகள் மட்டுமே வருவதுடன் கதையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதாகவும் இல்லை. அதனால் தான் அந்தப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். அதேசமயம் வேர்ல்டு பேமஸ் லவ்வர் மற்றும் டக் ஜெகதீஷ் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இனி அதுபோன்ற கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை எனவும் கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பது என்றும் முடிவெடுத்துள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.




