மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா | புதையல் கதையில் நாக சைதன்யா | மறுவெளியீட்டுக்காக 20 நிமிடங்கள் குறைக்கப்பட்ட 'ஆட்டோகிராப்' | தமிழ் சினிமாவில் தெலுங்கு ஆதிக்கம் | நாயகன் படத்தின் தொடர்ச்சியா... தக் லைப் : கமல் பதில் | இல்லறத்தில் 25வது ஆண்டு, சினிமாவில் 30வது ஆண்டு | விஷால், தன்ஷிகா இணைய காரணமான டி.ராஜேந்தர் |
ஹீரோக்களுடன் சேர்ந்து டூயட் பாடும் கதாநாயகி என்பதைவிட கதையை தாங்கிப்பிடிக்கும் கதாநாயகியாக நடிகவே ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படி இல்லையா கதையின் திருப்பத்துக்கு தேவையான முக்கியமான பாத்திரமாகவோ, ரசிகர்களின் மனதில் தாக்கம் ஏற்படும் பாத்திரமாகவோ அது இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனால் தான் சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் ராணா இணைந்து நடிக்கும் படத்தில் நடிப்பதற்கு தேடி வந்த வாய்ப்பை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
காரணம் அந்தப்படத்தில் ராணாவுக்கு ஜோடியாக அவரை நடிக்க அழைத்தனர். ஆனால் அந்த பெண் கதாபாத்திரம் திரையில் சில காட்சிகள் மட்டுமே வருவதுடன் கதையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதாகவும் இல்லை. அதனால் தான் அந்தப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். அதேசமயம் வேர்ல்டு பேமஸ் லவ்வர் மற்றும் டக் ஜெகதீஷ் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இனி அதுபோன்ற கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை எனவும் கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பது என்றும் முடிவெடுத்துள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.