ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் ராம் சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். அவர் அளித்த பேட்டி:இந்த நிகழ்ச்சியில் அதிக நாள் நீடிக்க மாட்டேன் என நன்றாகவே தெரியும். உணவுக்காக அதிக சிரமப்பட வேண்டியிருந்தது. பாதி நேரம் களைப்பாகவே இருக்கும். இது தெரிந்தது தான். ஆனால் நல்ல அனுபவமாக இருந்தது.
சருமப்பிரச்னையும் உருவானதால், போட்டியில் பங்கேற்பது கடினமாகிவிட்டது. நான் நடித்த படம் விரைவில் வெளியாகிறது. அதற்கு உதவுமே என்று தான் ‛சர்வைவர்' நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மற்றபடி வெற்றி பெற முடியாது என நன்றாக தெரியும். குறும்படம் ஒன்றை இதிலும் போட்டிருந்தால் என் பக்கம் இருந்த நியாயம் வெளிப்பட்டிருக்கும். என் ரசிகர்களே பலர் குறும்படம் வெளியிட்டு விட்டனர். மொத்த பேருமே எனக்கு எதிராக தான் இருந்தனர். போட்டியாளர்கள் எனக்கு எதிராக சின்ன விஷயத்தை, ஊதி பெரிதாக்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சியே அடுத்தவர்களை காலி செய்வது தான். ரசிகர்களிடம் எனக்கு வரவேற்பு கிடைத்த வரையில் எனக்கு இந்த சர்வைவர் நல்ல அனுபவமே. இவ்வாறு அவர் கூறினார்.