இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் ராம் சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். அவர் அளித்த பேட்டி:இந்த நிகழ்ச்சியில் அதிக நாள் நீடிக்க மாட்டேன் என நன்றாகவே தெரியும். உணவுக்காக அதிக சிரமப்பட வேண்டியிருந்தது. பாதி நேரம் களைப்பாகவே இருக்கும். இது தெரிந்தது தான். ஆனால் நல்ல அனுபவமாக இருந்தது.
சருமப்பிரச்னையும் உருவானதால், போட்டியில் பங்கேற்பது கடினமாகிவிட்டது. நான் நடித்த படம் விரைவில் வெளியாகிறது. அதற்கு உதவுமே என்று தான் ‛சர்வைவர்' நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மற்றபடி வெற்றி பெற முடியாது என நன்றாக தெரியும். குறும்படம் ஒன்றை இதிலும் போட்டிருந்தால் என் பக்கம் இருந்த நியாயம் வெளிப்பட்டிருக்கும். என் ரசிகர்களே பலர் குறும்படம் வெளியிட்டு விட்டனர். மொத்த பேருமே எனக்கு எதிராக தான் இருந்தனர். போட்டியாளர்கள் எனக்கு எதிராக சின்ன விஷயத்தை, ஊதி பெரிதாக்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சியே அடுத்தவர்களை காலி செய்வது தான். ரசிகர்களிடம் எனக்கு வரவேற்பு கிடைத்த வரையில் எனக்கு இந்த சர்வைவர் நல்ல அனுபவமே. இவ்வாறு அவர் கூறினார்.