சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் ராம் சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். அவர் அளித்த பேட்டி:இந்த நிகழ்ச்சியில் அதிக நாள் நீடிக்க மாட்டேன் என நன்றாகவே தெரியும். உணவுக்காக அதிக சிரமப்பட வேண்டியிருந்தது. பாதி நேரம் களைப்பாகவே இருக்கும். இது தெரிந்தது தான். ஆனால் நல்ல அனுபவமாக இருந்தது.
சருமப்பிரச்னையும் உருவானதால், போட்டியில் பங்கேற்பது கடினமாகிவிட்டது. நான் நடித்த படம் விரைவில் வெளியாகிறது. அதற்கு உதவுமே என்று தான் ‛சர்வைவர்' நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மற்றபடி வெற்றி பெற முடியாது என நன்றாக தெரியும். குறும்படம் ஒன்றை இதிலும் போட்டிருந்தால் என் பக்கம் இருந்த நியாயம் வெளிப்பட்டிருக்கும். என் ரசிகர்களே பலர் குறும்படம் வெளியிட்டு விட்டனர். மொத்த பேருமே எனக்கு எதிராக தான் இருந்தனர். போட்டியாளர்கள் எனக்கு எதிராக சின்ன விஷயத்தை, ஊதி பெரிதாக்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சியே அடுத்தவர்களை காலி செய்வது தான். ரசிகர்களிடம் எனக்கு வரவேற்பு கிடைத்த வரையில் எனக்கு இந்த சர்வைவர் நல்ல அனுபவமே. இவ்வாறு அவர் கூறினார்.




