Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அகல கால் வைக்க விரும்பவில்லை- சமந்தா

19 டிச, 2012 - 03:41 IST
எழுத்தின் அளவு:

அதர்வாவுக்கு ஜோடியாக பாணா காத்தாடி படத்தில் நடித்தவர் சமந்தா. அதையடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்தவர் பின்னர் தெலுங்கில் பிசியான நடிகையாகிவிட்டார். அங்குள்ள முன்னணி நடிகர்களுடன் அவர் ஜோடி போட்டு வந்த நேரம்தான், மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களுக்கு கமிட்டானார். ஆனால் தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை காரணமாக அந்த படங்களில் இருந்து வெளியேறினார் சமந்தா.

இருப்பினும் கெளதம்மேனனின் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்து, விட்ட இடத்தை பிடித்துவிட்டார். இந்நிலையில் தெலுங்கில் சமந்தா நடித்த எட்டோ வெள்ளிப்போயிந்தி மனச என்ற படம் இந்தியில் ரீமேக் ஆனபோது அதில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுத்தபோது மறுத்து விட்டார் சமந்தா. காரணம், அகல கால் வைத்தால் எந்த மொழியிலும் பெரிய இடத்தை பிடிக்க முடியாது. அதனால் தென்னிந்திய சினிமா மட்டுமே போதுமென்று நினைக்கிறேன். அதுவும் தமிழ், தெலுங்கு, மலையாளமெல்லாம் எனக்கு தெரிந்த மொழிகள். அதனால் தெரிந்த மொழியில் புரிந்து நடிப்பதையே விரும்புகிறேன். அப்படி நடித்து தென்னிந்திய சினிமாவில் நம்பர்ஒன் இடத்தை அந்தஸ்தை எட்ட வேண்டும் என்பதே எனது எதிர்கால திட்டம் என்கிறார் சமந்தா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)