‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் |
அதர்வாவுக்கு ஜோடியாக பாணா காத்தாடி படத்தில் நடித்தவர் சமந்தா. அதையடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்தவர் பின்னர் தெலுங்கில் பிசியான நடிகையாகிவிட்டார். அங்குள்ள முன்னணி நடிகர்களுடன் அவர் ஜோடி போட்டு வந்த நேரம்தான், மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களுக்கு கமிட்டானார். ஆனால் தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை காரணமாக அந்த படங்களில் இருந்து வெளியேறினார் சமந்தா.
இருப்பினும் கெளதம்மேனனின் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்து, விட்ட இடத்தை பிடித்துவிட்டார். இந்நிலையில் தெலுங்கில் சமந்தா நடித்த எட்டோ வெள்ளிப்போயிந்தி மனச என்ற படம் இந்தியில் ரீமேக் ஆனபோது அதில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுத்தபோது மறுத்து விட்டார் சமந்தா. காரணம், அகல கால் வைத்தால் எந்த மொழியிலும் பெரிய இடத்தை பிடிக்க முடியாது. அதனால் தென்னிந்திய சினிமா மட்டுமே போதுமென்று நினைக்கிறேன். அதுவும் தமிழ், தெலுங்கு, மலையாளமெல்லாம் எனக்கு தெரிந்த மொழிகள். அதனால் தெரிந்த மொழியில் புரிந்து நடிப்பதையே விரும்புகிறேன். அப்படி நடித்து தென்னிந்திய சினிமாவில் நம்பர்ஒன் இடத்தை அந்தஸ்தை எட்ட வேண்டும் என்பதே எனது எதிர்கால திட்டம் என்கிறார் சமந்தா.