'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

2022ம் ஆண்டு இந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை இனிமையான ஆண்டாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பெரிய படங்கள் சில வெளியாக உள்ளன.
தமிழைப் பொறுத்தவரையில் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிக்கும் 'வலிமை' படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற படங்களைப் பற்றிய அறிவிப்புகளும் இந்த மாதத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதனிடையே, தெலுங்கில் பொங்கலுக்கு சில முக்கிய படங்களை வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். இப்போது அந்தப் போட்டியில் 'ஆர்ஆர்ஆர்' படமும் நுழைய உள்ளதால் மற்ற படங்கள் போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படம் ஏற்கெனவே பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. அக்டோபர் 13ம் தேதி வெளியாவதாக இருந்த 'ஆர்ஆர்ஆர்' படம் இப்போது நேரடியாக 'ராதே ஷ்யாம்' படத்துடன் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது.
இந்த இரண்டு பெரிய படங்களும் வருவதால் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த மற்ற தெலுங்குப் படங்களான மகேஷ் பாபு நடிக்கும் 'சர்க்காரு வாரி பாட்டா', சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா', பவன் கல்யாண் நடிக்கும் 'பீம்ல நாயக்' ஆகிய படங்களின் வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டியுள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் இந்த மாற்றத்தால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கோபத்திற்கு ஆளாகியுள்ளதாகத் தெரிகிறது.




