என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
2022ம் ஆண்டு இந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை இனிமையான ஆண்டாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பெரிய படங்கள் சில வெளியாக உள்ளன.
தமிழைப் பொறுத்தவரையில் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிக்கும் 'வலிமை' படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற படங்களைப் பற்றிய அறிவிப்புகளும் இந்த மாதத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதனிடையே, தெலுங்கில் பொங்கலுக்கு சில முக்கிய படங்களை வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். இப்போது அந்தப் போட்டியில் 'ஆர்ஆர்ஆர்' படமும் நுழைய உள்ளதால் மற்ற படங்கள் போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படம் ஏற்கெனவே பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. அக்டோபர் 13ம் தேதி வெளியாவதாக இருந்த 'ஆர்ஆர்ஆர்' படம் இப்போது நேரடியாக 'ராதே ஷ்யாம்' படத்துடன் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது.
இந்த இரண்டு பெரிய படங்களும் வருவதால் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த மற்ற தெலுங்குப் படங்களான மகேஷ் பாபு நடிக்கும் 'சர்க்காரு வாரி பாட்டா', சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா', பவன் கல்யாண் நடிக்கும் 'பீம்ல நாயக்' ஆகிய படங்களின் வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டியுள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் இந்த மாற்றத்தால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கோபத்திற்கு ஆளாகியுள்ளதாகத் தெரிகிறது.