நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில், பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்த 'ராதேஷ்யாம்' படம் கடந்த வாரம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. படத்தின் வசூல் மிகக் குறைவாக இருப்பதாக ஆரம்ப கட்டத்திலேயே செய்திகள் வர தயாரிப்பு நிறுவனம் அவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வசூல் விவரங்களை வெளியிட ஆரம்பித்தது. முதல் நாள் வசூல் 79 கோடி ரூபாய், இரண்டாவது நாளில் 119 கோடி ரூபாய் என்றும் அறிவித்தார்கள். நேற்றைய மூன்றாவது நாளையும் சேர்த்து வசூல் 150 கோடியைத் தாண்டிவிட்டதாக அறிவித்துள்ளார்கள்.
அது மட்டுமல்ல 2022ம் ஆண்டில் அதிகபட்சமான பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். தயாரிப்பு நிறுவனம் இப்படி அறிவித்து வர, ஹிந்தியிலோ படம் படுதோல்வியை நோக்கி போய்க் கொண்டிருப்பதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாஸ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'சாஹோ' படம் 100 கோடி வசூலை ஹிந்தியில் தந்தது. ஆனால், இந்த 'ராதேஷ்யாம்' படம் 25 கோடியைக் கடந்தாலே ஆச்சரியம் என்றும் சொல்கிறார்கள்.
தமிழில் படத்திற்கு சுத்தமாக வரவேற்பே இல்லை என்பது அதிர்ச்சித் தகவல். இந்தப் படத்திற்காக இங்கு பத்திரிகையாளர் காட்சியைக் கூட தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை. நிலைமை இப்படியிருக்க இந்தப் படத்தை பான்--இந்தியா படம் என்று அழைப்பதே தவறு என கோலிவுட்டில் கிண்டலடிக்கிறார்கள்.