ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

'பாகுபலி, சாஹோ' ஆகிய படங்கள் தெலுங்கு நடிகரான பிரபாஸை பான்-இந்தியா நடிகர் என்று சொல்ல வைத்தன. அந்தப் படங்களின் வசூலும் ஹிந்தியில் 100 கோடியைத் தாண்டியது. 'சாஹோ' படம் தென்னிந்தியாவில் தோல்வியடைந்தாலும் ஹிந்தியில் 100 கோடியைத் தாண்டி ஆச்சரியப்படுத்தியது.
அதற்கடுத்து பிரபாஸ் நடித்த 'ராதே ஷ்யாம்' ஐந்து மொழிகளில் நேற்று வெளியானது. ஒரு ஆக்ஷன் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களை இந்தப் படம் ஏமாற்றியுள்ளது. ஹிந்தியில் இந்தப் படத்தை முற்றிலுமான ஆக்ஷன் படமாகவே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள். அவர்களுக்கு இப்படத்தில் இருக்கும் ரொமான்ஸ் பிடிக்காமல் போயிருக்கிறது.
அதனால்தான் முதல் நாளான நேற்று சுமார் 5 கோடி வரை மட்டுமே படம் வசூலித்துள்ளது. 'சாஹோ' படம் கூட முதல் நாள் வசூலாக 25 கோடி வரை வசூலித்திருந்த நிலையில் இவ்வளவு குறைவான வசூல் பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், கமர்ஷியல் மசாலா படங்களை அதிகம் விரும்பிப் பார்க்கும் தெலுங்கு ரசிகர்களுக்கும் இந்தப் படம் திருப்தியளிக்கவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் முதல் நாள் வசூலாக 25 கோடி வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
மொத்தமாக 200 கோடி அளவிற்கு வியாபாரம் நடந்துள்ளதால் இப்படத்தின் மொத்த வசூல் 300 கோடியைக் கடந்தால் மட்டுமே படத்தில் லாபம் பார்க்க முடியும் என்கிறார்கள்.




