சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

'பாகுபலி, சாஹோ' ஆகிய படங்கள் தெலுங்கு நடிகரான பிரபாஸை பான்-இந்தியா நடிகர் என்று சொல்ல வைத்தன. அந்தப் படங்களின் வசூலும் ஹிந்தியில் 100 கோடியைத் தாண்டியது. 'சாஹோ' படம் தென்னிந்தியாவில் தோல்வியடைந்தாலும் ஹிந்தியில் 100 கோடியைத் தாண்டி ஆச்சரியப்படுத்தியது.
அதற்கடுத்து பிரபாஸ் நடித்த 'ராதே ஷ்யாம்' ஐந்து மொழிகளில் நேற்று வெளியானது. ஒரு ஆக்ஷன் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களை இந்தப் படம் ஏமாற்றியுள்ளது. ஹிந்தியில் இந்தப் படத்தை முற்றிலுமான ஆக்ஷன் படமாகவே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள். அவர்களுக்கு இப்படத்தில் இருக்கும் ரொமான்ஸ் பிடிக்காமல் போயிருக்கிறது.
அதனால்தான் முதல் நாளான நேற்று சுமார் 5 கோடி வரை மட்டுமே படம் வசூலித்துள்ளது. 'சாஹோ' படம் கூட முதல் நாள் வசூலாக 25 கோடி வரை வசூலித்திருந்த நிலையில் இவ்வளவு குறைவான வசூல் பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், கமர்ஷியல் மசாலா படங்களை அதிகம் விரும்பிப் பார்க்கும் தெலுங்கு ரசிகர்களுக்கும் இந்தப் படம் திருப்தியளிக்கவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் முதல் நாள் வசூலாக 25 கோடி வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
மொத்தமாக 200 கோடி அளவிற்கு வியாபாரம் நடந்துள்ளதால் இப்படத்தின் மொத்த வசூல் 300 கோடியைக் கடந்தால் மட்டுமே படத்தில் லாபம் பார்க்க முடியும் என்கிறார்கள்.




