ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
'பாகுபலி, சாஹோ' ஆகிய படங்கள் தெலுங்கு நடிகரான பிரபாஸை பான்-இந்தியா நடிகர் என்று சொல்ல வைத்தன. அந்தப் படங்களின் வசூலும் ஹிந்தியில் 100 கோடியைத் தாண்டியது. 'சாஹோ' படம் தென்னிந்தியாவில் தோல்வியடைந்தாலும் ஹிந்தியில் 100 கோடியைத் தாண்டி ஆச்சரியப்படுத்தியது.
அதற்கடுத்து பிரபாஸ் நடித்த 'ராதே ஷ்யாம்' ஐந்து மொழிகளில் நேற்று வெளியானது. ஒரு ஆக்ஷன் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களை இந்தப் படம் ஏமாற்றியுள்ளது. ஹிந்தியில் இந்தப் படத்தை முற்றிலுமான ஆக்ஷன் படமாகவே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள். அவர்களுக்கு இப்படத்தில் இருக்கும் ரொமான்ஸ் பிடிக்காமல் போயிருக்கிறது.
அதனால்தான் முதல் நாளான நேற்று சுமார் 5 கோடி வரை மட்டுமே படம் வசூலித்துள்ளது. 'சாஹோ' படம் கூட முதல் நாள் வசூலாக 25 கோடி வரை வசூலித்திருந்த நிலையில் இவ்வளவு குறைவான வசூல் பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், கமர்ஷியல் மசாலா படங்களை அதிகம் விரும்பிப் பார்க்கும் தெலுங்கு ரசிகர்களுக்கும் இந்தப் படம் திருப்தியளிக்கவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் முதல் நாள் வசூலாக 25 கோடி வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
மொத்தமாக 200 கோடி அளவிற்கு வியாபாரம் நடந்துள்ளதால் இப்படத்தின் மொத்த வசூல் 300 கோடியைக் கடந்தால் மட்டுமே படத்தில் லாபம் பார்க்க முடியும் என்கிறார்கள்.