தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் |

சினிமாவில் நடித்த கதாபாத்திரம் போலவே நிஜத்திலும் நடந்து கொண்டு நைஜீரிய நடிகர் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து சூர்யா-ஹரி கூட்டணியில் சிங்கம்-2 படம் உருவாகி இருந்தது. இந்தப்படத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள தமிழக வில்லன்களுக்கு உதவும் நைஜீரிய வில்லனாக டேனி சபானி என்கிற நைஜீரிய நடிகர் நடித்திருந்தார்.
அந்தப்படத்தில் போதைப்பொருள் கடத்தலில் அவரது உதவியாளராக உடன் நடித்தவர்களில் ஒருவர் தான் செக்வுமே மால்வின் என்பவர். அவர்தான் தற்போது நிஜத்திலும் போதைப்பொருள் கடத்தியதாக நைஜீரிய போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யமாக பேசப்பட்டு வருகிறது.