ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
கொரோனா இரண்டாவது அலை முடிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதோ இல்லையோ, சினிமா தியேட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் 11 படங்கள் வரை வெளிவந்தாலும் 'கோடியில் ஒருவன்' படம் மட்டும் தான் லாபகரமான படமாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் மாதம் 1ம் தேதியிலேயே புதிய பட வெளியீட்டுடன்தான் மாதம் ஆரம்பமாக உள்ளது. அக்டோபர் 9ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படம் வெளிவரப் போகிறது. அதற்கடுத்து அக்டோபர் 14ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு 'அரண்மனை 3, எனிமி, ராஜவம்சம், தள்ளிப் போகதே' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் மேலும் சில படங்கள் இடம் பெறுமா, அல்லது இதிலேயே சில படங்கள் வெளியேறுமா என்பது இனி வரும் நாட்களில் தெரியும்.
இப்போதைய நிலவரப்படி ஒரு 'பேய் காமெடி, ஒரு ஆக்ஷன், ஒரு பேமிலி, ஒரு லவ்' என நான்கு விதமான படங்கள் களத்தில் நிற்கின்றன. அக்டோபர் 14க்குள் தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கிடைத்தால், இந்தப் படங்கள் நன்றாக இருந்தால் நல்ல வசூலைப் பெற வாய்ப்புள்ளது.