தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கொரோனா இரண்டாவது அலை முடிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதோ இல்லையோ, சினிமா தியேட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் 11 படங்கள் வரை வெளிவந்தாலும் 'கோடியில் ஒருவன்' படம் மட்டும் தான் லாபகரமான படமாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் மாதம் 1ம் தேதியிலேயே புதிய பட வெளியீட்டுடன்தான் மாதம் ஆரம்பமாக உள்ளது. அக்டோபர் 9ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படம் வெளிவரப் போகிறது. அதற்கடுத்து அக்டோபர் 14ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு 'அரண்மனை 3, எனிமி, ராஜவம்சம், தள்ளிப் போகதே' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் மேலும் சில படங்கள் இடம் பெறுமா, அல்லது இதிலேயே சில படங்கள் வெளியேறுமா என்பது இனி வரும் நாட்களில் தெரியும்.
இப்போதைய நிலவரப்படி ஒரு 'பேய் காமெடி, ஒரு ஆக்ஷன், ஒரு பேமிலி, ஒரு லவ்' என நான்கு விதமான படங்கள் களத்தில் நிற்கின்றன. அக்டோபர் 14க்குள் தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கிடைத்தால், இந்தப் படங்கள் நன்றாக இருந்தால் நல்ல வசூலைப் பெற வாய்ப்புள்ளது.