அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
கொரோனா இரண்டாவது அலை முடிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதோ இல்லையோ, சினிமா தியேட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் 11 படங்கள் வரை வெளிவந்தாலும் 'கோடியில் ஒருவன்' படம் மட்டும் தான் லாபகரமான படமாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் மாதம் 1ம் தேதியிலேயே புதிய பட வெளியீட்டுடன்தான் மாதம் ஆரம்பமாக உள்ளது. அக்டோபர் 9ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படம் வெளிவரப் போகிறது. அதற்கடுத்து அக்டோபர் 14ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு 'அரண்மனை 3, எனிமி, ராஜவம்சம், தள்ளிப் போகதே' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் மேலும் சில படங்கள் இடம் பெறுமா, அல்லது இதிலேயே சில படங்கள் வெளியேறுமா என்பது இனி வரும் நாட்களில் தெரியும்.
இப்போதைய நிலவரப்படி ஒரு 'பேய் காமெடி, ஒரு ஆக்ஷன், ஒரு பேமிலி, ஒரு லவ்' என நான்கு விதமான படங்கள் களத்தில் நிற்கின்றன. அக்டோபர் 14க்குள் தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கிடைத்தால், இந்தப் படங்கள் நன்றாக இருந்தால் நல்ல வசூலைப் பெற வாய்ப்புள்ளது.