கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் | ‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் | தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குனரும் ஆனார் ரவிமோகன் |
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நாகர்ஜூனாவின் மகன் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் கூட, ரசிகர்களிடம் அவருக்கு இருந்த கிரேஸ் இன்னும் குறையவில்லை. தனது காதல் கணவருடன் இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய சமந்தா, சமீப நாட்களாக அவரிடம் இருந்து பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதை உறுதிப்படுத்துவது போல சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் செயல்பாடுகளும் இருக்கின்றன. இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக கூட சமீபத்தில் பரபரப்பான செய்தி ஒன்று வெளியானது. இந்த நிலையில் சமந்தா தன்னை குறித்து தேவையில்லாத வதந்திகளும் அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தனது கணவருடன் ஒருவேளை பிரிவு என்றாலும் கூட அதை நானே முறைப்படி அறிவிபேன் என்றும் இப்படி ஆளாளுக்கு விதவிதமாக செய்திகளை திரித்து எழுதுவதற்கு, முற்றுப்புள்ளி வைக்க போவதாக சமந்தா தனது நட்பு வட்டாரத்தில் கூறியுள்ளதாகவும் தெரிகிறது