அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா? | விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! |
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நாகர்ஜூனாவின் மகன் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் கூட, ரசிகர்களிடம் அவருக்கு இருந்த கிரேஸ் இன்னும் குறையவில்லை. தனது காதல் கணவருடன் இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய சமந்தா, சமீப நாட்களாக அவரிடம் இருந்து பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதை உறுதிப்படுத்துவது போல சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் செயல்பாடுகளும் இருக்கின்றன. இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக கூட சமீபத்தில் பரபரப்பான செய்தி ஒன்று வெளியானது. இந்த நிலையில் சமந்தா தன்னை குறித்து தேவையில்லாத வதந்திகளும் அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தனது கணவருடன் ஒருவேளை பிரிவு என்றாலும் கூட அதை நானே முறைப்படி அறிவிபேன் என்றும் இப்படி ஆளாளுக்கு விதவிதமாக செய்திகளை திரித்து எழுதுவதற்கு, முற்றுப்புள்ளி வைக்க போவதாக சமந்தா தனது நட்பு வட்டாரத்தில் கூறியுள்ளதாகவும் தெரிகிறது