ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி |

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நாகர்ஜூனாவின் மகன் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் கூட, ரசிகர்களிடம் அவருக்கு இருந்த கிரேஸ் இன்னும் குறையவில்லை. தனது காதல் கணவருடன் இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய சமந்தா, சமீப நாட்களாக அவரிடம் இருந்து பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதை உறுதிப்படுத்துவது போல சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் செயல்பாடுகளும் இருக்கின்றன. இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக கூட சமீபத்தில் பரபரப்பான செய்தி ஒன்று வெளியானது. இந்த நிலையில் சமந்தா தன்னை குறித்து தேவையில்லாத வதந்திகளும் அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தனது கணவருடன் ஒருவேளை பிரிவு என்றாலும் கூட அதை நானே முறைப்படி அறிவிபேன் என்றும் இப்படி ஆளாளுக்கு விதவிதமாக செய்திகளை திரித்து எழுதுவதற்கு, முற்றுப்புள்ளி வைக்க போவதாக சமந்தா தனது நட்பு வட்டாரத்தில் கூறியுள்ளதாகவும் தெரிகிறது




